கோவையில் சட்டவிரோத மண் எடுப்பு: நீதிபதிகள் நேரில் ஆய்வு

கோவை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மண் எடுத்து செங்கல் உற்பத்தி செய்யும் விவகாரம் குறித்து நீதிபதிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். பேரூர், மாதம்பட்டி, கரடிமடை பகுதிகளில் நடைபெற்ற ஆய்வில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மண் எடுத்து செங்கல் உற்பத்தி செய்யும் விவகாரம் தொடர்பாக நீதிபதிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

பேரூர் வட்டம் ஆலந்துறை, காளிமங்கலம், தேவராயபுரம், வால்கரடு மற்றும் மதுக்கரை வட்டம் கரடிமடை ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மண் எடுத்து செங்கல் உற்பத்தி நடைபெறுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.



இதையடுத்து, சட்டவிரோதமாக மணல் கடத்தும் நபர்களை உடனடியாக கைது செய்து, இயந்திரங்களை பறிமுதல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த வாரம் கோவை மாவட்ட ஆட்சியர் நடத்திய திடீர் ஆய்வில், முறைகேடாக மண் எடுப்பதும், செங்கல் தயாரிப்பதும் கண்டறியப்பட்டது.

இந்நிலையில், செப்டம்பர் 29 அன்று பேரூர், மாதம்பட்டி, கரடிமடை ஆகிய பகுதிகளில் கோவை மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி நாராயணன், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பு நீதிபதி ரமேஷ், மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati, கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் அறிக்கை விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத மண் எடுப்பு மற்றும் செங்கல் உற்பத்தி தொடர்பான நடவடிக்கைகள் குறித்த முடிவுகள் இந்த அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...