கோவை அரசு மருத்துவமனையில் கொள்ளையனிடம் நீதிபதி வாக்குமூலம்

நாமக்கல் அருகே கண்டெய்னரில் இருந்து பணத்துடன் தப்பிக்க முயன்ற கொள்ளையர் ஆசார் அலி, காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மாலதி அவரிடம் வாக்குமூலம் பெற்றார்.


Coimbatore: கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொள்ளையன் ஆசார் அலியிடம் குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மாலதி வாக்குமூலம் பெற்றார்.

நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே கண்டெய்னரில் இருந்து பணத்துடன் தப்பிக்க முயன்ற கொள்ளையர்களில் ஒருவரான ஆசார் அலி, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் காயமடைந்தார். இதனைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



இந்நிலையில், இன்று கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மாலதி, குற்றவாளி ஆசார் அலியிடம் வாக்குமூலம் பெற்றார். இந்த வாக்குமூலத்தில் கொள்ளை சம்பவம் தொடர்பான முக்கிய தகவல்கள் பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற நபர்களையும் விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...