அரவிந்த் கண் மருத்துவமனையின் புதிய கட்டிடம் திறப்பு: கோவை எம்பி கணபதி ராஜ்குமார் பங்கேற்பு

கோவை அவினாசி சாலையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையின் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் திறக்கப்பட்டது. கோவை எம்பி கணபதி ராஜ்குமார் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை அவினாசி சாலையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவின் தலைமை விருந்தினராக பாரதிய வித்யா பவன் தலைவரும் கல்வியாளருமான கிருஷ்ணராஜ் வானவராயர் கலந்து கொண்டார்.



விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், பிரிக்கால் லிமிடெட் தலைவர் வனிதா மோகன், லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு ஆகியோர் பங்கேற்றனர்.



பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர், அரவிந்த் கண் மருத்துவமனையின் புதிய கட்டிடத்தினை திறந்து வைத்தார். அரவிந்த் கண் மருத்துவமனையின் இயக்குனர் (திட்டங்கள்) அரவிந்த், மருத்துவமனை தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை செய்துள்ள சாதனைகள் குறித்தும் வருங்கால திட்டங்கள் குறித்தும் விரிவாக விளக்கினார்.



கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் தனது உரையில், அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ தர்மத்தோடு செயல்படுவதாகவும், அரவிந்த் கண் மருத்துவமனை போன்று சேவை மனப்பான்மையோடும் அர்ப்பணிப்போடும் இருப்பவர்கள் அரசுக்கு மிகவும் உதவிகரமாக செயல்படுவதாகவும் கூறினார்.



மேலும் அவர், தமிழக முதல்வர் கோவையின் மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகவும், சென்னைக்கு இணையாக கோவை முன்னேறி வருகிறது என்றும் குறிப்பிட்டார். "நியூயார்க்கையும் வாஷிங்டனையும் போன்று கோவையும் சென்னையும் வரப்போகிறது" என்று கணபதி ராஜ்குமார் தெரிவித்தார்.

Newsletter

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...