உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமனம்: பொள்ளாச்சியில் திமுகவினர் கொண்டாட்டம்

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டதை முன்னிட்டு பொள்ளாச்சியில் திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.


Coimbatore: தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு, உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை முன்னிட்டு பொள்ளாச்சியில் திமுகவினர் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த கொண்டாட்டத்திற்கு நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதுடன், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும், உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பப்பட்டன.



இந்த நிகழ்ச்சியில் பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதி கிருஷ்ணன், நகர்மன்றத் துணைத் தலைவர் கௌதம், நகரத் திமுக துணைச் செயலாளர் தர்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். அத்துடன் திமுக நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நகர நிர்வாகிகள் என பலரும் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.

உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக நியமிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிந்துரை செய்ததையடுத்து, இந்த நியமனம் அறிவிக்கப்பட்டது. இந்த நியமனம் தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

Newsletter

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...