'வாரிசு அரசியலையும் ஊழல் அரசியலையும் தாங்க இதயத்தை பலமாக வைத்திருக்க வேண்டும்' - வானதி சீனிவாசன்

கோவையில் உலக இருதய தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு நடைபயணத்தில் கோவை தெற்கு MLA வானதி சீனிவாசன் பங்கேற்று, தமிழக அரசியல் நிலவரம் குறித்து கருத்து தெரிவித்தார்.


Coimbatore: உலக இருதய தினத்தை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் தனியார் மருத்துவமனை சார்பில் இருதய விழிப்புணர்வு நடைபயணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது வானதி சீனிவாசன் கூறுகையில், "தமிழ்நாடு அரசியலில் இன்று நடக்கும் வாரிசு அரசியலையும் ஊழல் அரசியலையும் தாங்க வேண்டும் என்றால் இதயத்தை பலமாக வைத்திருக்க வேண்டும் என்பதால் இதயத்துக்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.

மேலும், துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த வானதி சீனிவாசன், "இதயத்தை பலப்படுத்தி விட்டு வருகிறேன்" எனக் கூறி விடைபெற்றார்.

இந்த நிகழ்வில் வானதி சீனிவாசன் கூறிய கருத்துக்கள் தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாரிசு அரசியல் மற்றும் ஊழல் குறித்த அவரது கருத்துக்கள் ஆளும் கட்சியை குறிவைத்ததாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Newsletter

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...