மேட்டுப்பாளையம் நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு: அ.தி.மு.க கவுன்சிலர்கள் மீது வழக்கு

மேட்டுப்பாளையம் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் டம்ளர் வீசி, ஆவணங்களை கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் 9 அ.தி.மு.க கவுன்சிலர்களுக்கு தடை விதிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: மேட்டுப்பாளையம் நகராட்சியின் சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் மெஹரீபா பர்வீன் அஷ்ரப் அலி தலைமையில் நேற்று (செப்டம்பர் 27) நடைபெற்றது. கூட்டத்தில் 32 தீர்மானங்கள் மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டன.

கூட்டத்தில் மக்கள் பிரச்சினை குறித்து பேசும்போது அ.தி.மு.க மற்றும் தி.மு.க கவுன்சிலர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்போது, 7-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் முகமது இப்ராஹீம் (சலீம்) தண்ணீர் குடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த சில்வர் டம்ளரை தூக்கி தரையில் வீசினார். அது தெறித்து நகர் மன்ற தலைவர் மற்றும் கமிஷனர் அருகில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தொடர்ந்து இரு கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 18-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் சுனில்குமார் ஆவேசமாக மன்றத்தின் முன் வைக்கப்பட்ட தீர்மான நகலை கிழித்து வீசினார். இதனையடுத்து போலீசார் கூட்ட அரங்கில் நுழைந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், நகராட்சி தலைவர் மெஹரீபா பர்வீன் அஷ்ரப் அலி, அ.தி.மு.க கவுன்சிலர்களின் வன்முறை போக்கை கண்டித்து, வரும் இரு கூட்டத் தொடர்களில் 9 அ.தி.மு.க கவுன்சிலர்கள் பங்கேற்க தடை விதித்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து அ.தி.மு.க கவுன்சிலர்கள் நகர்மன்ற கூட்ட அரங்கிலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, நகராட்சி அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். நகராட்சி தலைவர், கமிஷனர், காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் அ.தி.மு.க கவுன்சிலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இரவில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் கூட்ட அரங்கை விட்டு வெளியேறினர்.

நகராட்சி கமிஷனர் அமுதா அளித்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் 9 அ.தி.மு.க கவுன்சிலர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மிரட்டுதல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...