கோவையில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம்

கோவை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் IAS, ஒக்கிலியர் காலனியில் சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். 40 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்வும் நடைபெற்றது.


கோவை : கோவைமாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண் 80-க்குட்பட்ட ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் "கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம்" நடைபெற்றது.



இந்த முகாமை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள் துவக்கி வைத்தார்.



துணை மேயர் ரா. வெற்றிசெல்வன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், 40 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்வும் நடத்தப்பட்டது. ஆணையாளர் அவர்கள் கர்ப்பிணிகளுக்கு சீதனப்பொருட்களை வழங்கினார்.

இந்த சிறப்பு மருத்துவ முகாமில் பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், அறுவை சிகிச்சை ஆலோசனை, எலும்பு மூட்டு சிகிச்சை, மகளிர் நல மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், கர்ப்பவாய் புற்றுநோய் பரிசோதனை, குழந்தைகள் நல மருத்துவம், காது, மூக்கு, தொண்டை நல மருத்துவம், தோல் மருத்துவம், சித்தா, ஆயுர்வேத மற்றும் இயற்கை மருத்துவம் ஆகியவை இதில் அடங்கும்.

மேலும், ECG ஸ்கேன், இரத்தம், சளி, சிறுநீர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தேவைப்படுவோருக்கு உடனடி சிகிச்சைகளும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.



பொதுசுகாதாரக் குழு தலைவர் பெ. மாரிசெல்வன் அவர்களின் சொந்த நிதியில் 40 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது. இதில் புடவை, ஜாக்கெட், வளையல்கள், பழவகைகள் உள்ளிட்ட சீதனப்பொருட்களை ஆணையாளர் வழங்கினார். கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களும் வழங்கப்பட்டன.





"மக்களைத் தேடி மருத்துவம்" திட்டத்தின் கீழ் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், பொதுசுகாதாரம், நோய்த்தடுப்பு மருந்துத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் ஆகிய துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கருத்து காட்சியையும் ஆணையாளர் பார்வையிட்டார்.



இந்நிகழ்ச்சியில் சுகாதாரக்குழு தலைவர் மாரிசெல்வன், நகர்நல அலுவலர் மரு. பூபதி, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், மண்டல மருத்துவ அலுவலர் மரு. தினேஷ் பெரியசாமி, சுகாதார அலுவலர்கள், மருத்துவ பணியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...