கோவை சி.ஆர்.பி.எஃப். பயிற்சி கல்லூரியில் 567 உதவி ஆய்வாளர்களுக்கு பதக்கம் வழங்கும் விழா

கோவை துடியலூரில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி கல்லூரியில் 96 ஏ பேட்ஜை சேர்ந்த 567 உதவி ஆய்வாளர்களுக்கு பதக்கம் வழங்கும் விழா மற்றும் அணிவகுப்பு நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக ஐ.ஜி வெங்கடேஷ் கலந்து கொண்டார்.


கோவை: கோவை துடியலூர் அருகே கதிர்நாயக்கன்பாளையத்தில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி கல்லூரியில் பயிற்சி முடித்த 96 ஏ பேட்ஜை சேர்ந்த உதவி ஆய்வாளர்கள் 567 பேருக்கு பதக்கம் வழங்கும் விழா மற்றும் அணிவகுப்பு சி.ஆர்.பி.எப். வளாகத்தில் நடைபெற்றது.



இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு தேர்ந்தெடுக்கப்படும் வீரர்களுக்கு இங்கு உடற்பயிற்சி, பாதுகாப்பு பயிற்சி, துப்பாக்கி சுடுதல், நீச்சல் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.



96 ஆ பேட்ஜில் கடந்த 6 மாதமாக பயிற்சி பெற்ற 567 வீரர் வீரங்கனைகளுக்கு பதக்கம் வழங்கும் விழா பயிற்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.



இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி முதல்வர் ஐ.ஜி வெங்கடேஷ் கலந்து பயிற்சி முடித்த வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.



பயிற்சியின்போது சிறப்பாக செயல்பட்ட வீரர் வீராங்களைகளுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.



100க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப். வீரர்கள் யோகா செய்து காண்பித்தனர்.



மேலும் தேசிய கொடியின் வண்ணத்தில் உடையணிந்து பல்வேறு விதமான நடனங்கள் ஆடினர்.



தொடர்ந்து மல்லர் கம்பத்தில் பல்வேறு சாகசங்களை செய்து காண்பித்து அசத்தினர்.



பயிற்சி முடித்த 567 வீரர் வீராங்களைகளுக்கு உதவி ஆய்வாளருக்கான பேட்ஜ் வழங்கப்பட்டது. இவர்கள் அனைவரும் நேரடியாக இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் துணை அதிகாரிகளாக நியமிக்கப்படவுள்ளனர். முடிவில் அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சி.ஆர்.பி.எப். வீரர்களின் குடும்பத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...