மேட்டுப்பாளையம் நகர்மன்றக் கூட்டத்தில் பதற்றம்: திமுகவினர் தாக்குதலில் அதிமுக உறுப்பினர் படுகாயம்

மேட்டுப்பாளையம் நகர்மன்றக் கூட்டத்தில் ஏற்பட்ட சர்ச்சையால் பதற்றம். அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட். திமுகவினர் தாக்குதலில் அதிமுக உறுப்பினர் குரு பிரசாத் படுகாயம். கோவை அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சை.


கோவை: மேட்டுப்பாளையம் நகராட்சியில் இன்று நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் ஒருவர் திடீரென தண்ணீர் குடிக்கும் டம்ளரை வீசி எறிந்ததால் பிரச்சனை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஒழுங்கு நடவடிக்கையாக அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் 9 பேரை அடுத்த இரண்டு நகர்மன்றக் கூட்டங்களுக்கு சஸ்பெண்ட் செய்வதாக நகராட்சித் தலைவர் மெஹரீபா பார்வின் அறிவித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் 9 பேர் நகராட்சிக் கூட்ட அரங்கில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். நகராட்சி ஆணையாளர் மற்றும் மேட்டுப்பாளையம் காவல்துறையினர் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி இரவு 8 மணிக்கு உடன்பாடு ஏற்பட்டு நகர்மன்ற உறுப்பினர்கள் வெளியே வந்தனர்.

அப்போது நகராட்சி அலுவலகத்தில் காத்திருந்த திமுக நிர்வாகிகள் சிலர் அதிமுக நகர்மன்ற உறுப்பினர்களைத் தாக்கினர்.



இந்தத் தாக்குதலில் அதிமுகவைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர் குரு பிரசாத் அவர்களுக்குக் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டது.

உடனடியாக குரு பிரசாத் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதிமுக மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அந்தக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மருத்துவமனை வளாகத்தில் கூடினர்.

குரு பிரசாத்தின் உடல் நிலை மோசமடைந்ததால், உடனடியாக அவரை மருத்துவர்கள் உயர் சிகிச்சை அளிக்க கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தாக்குதலில் அவருக்குப் பெரிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது இந்தச் சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...