ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் 22-வது liveSurge பயிலரங்கம்: சர்வதேச மருத்துவ நிபுணர்கள் பங்கேற்பு

கோவையில் ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் கார்டியோதோராசிக் துறை சார்பில் 22-வது liveSurge வருடாந்திர பயிலரங்கம் நடைபெற்றது. ஜெர்மனி, இத்தாலி, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளின் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றனர்.


கோவை: கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் கார்டியோதோராசிக் அறுவை சிகிச்சைத் துறை சார்பில் 22-வது liveSurge வருடாந்திர பயிலரங்கம் இன்று துவங்கியது.



இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த பயிலரங்கின் முதல் நாளில், ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி, கார்டியோதோராசிக் அறுவை சிகிச்சைத் துறையின் முன்னாள் துறைத்தலைவர் டாக்டர் முரளிதரன், கார்டியோதோராசிக் அறுவை சிகிச்சைத் துறை சேர்மன் டாக்டர் சந்திரசேகர், ஜி.கே.என்.எம் மருத்துவமனை மருத்துவர்கள், இந்தியாவின் பிற மாநிலங்கள், மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.



இந்த பயிலரங்கில் ஜெர்மனி, இத்தாலி, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள், பல்வேறு அமர்வுகளில் இருதய அறுவை சிகிச்சை சம்பந்தமான தகவல்களை காணொளி காட்சிகள் மூலம் விளக்கியதோடு தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.



இருதய அறுவை சிகிச்சை துறையில் நிகழ்ந்துவரும் தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் புதிய நடைமுறைகள் குறித்தான தகவல்கள் வழங்கப்பட்டன.



ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி கூறுகையில், "22-வது liveSurge பயிலரங்கம் கார்டியோதோராசிக் துறையில் உள்ள முக்கிய தலைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இந்த பயிலரங்கம் பங்கேற்பாளர்களுக்கு தேவையான தகவல்களை வழங்கும்" என்றார். மேலும், ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் கார்டியோதோராசிக் துறை பல்வேறு மேம்பட்ட தொழில்நுட்பங்களை கொண்டுள்ளதாகவும், ஆண்டொன்றுக்கு 1800 ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சைகள் செய்யப்படுவதாகவும் கூறினார்.



இந்த பயிலரங்கமானது பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்களை ஒன்றினைத்ததோடு, பங்கேற்பாளர்கள் தங்கள் சொந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்களுடன் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும் சிறந்த வாய்ப்பாக அமைந்தது. கார்டியோதோராசிக் அறுவை சிகிச்சை துறையில் தற்போதைய நிலையைப் புரிந்துகொள்ளவும், எதிர்காலத்தில் நிகழக்கூடிய மாற்றங்களுக்கு தயாராகவும் பங்கேற்பாளர்களுக்கு இந்த பயிலரங்கம் பெரிதும் உதவியது.

Newsletter

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...