குமாரபாளையம் கொள்ளை சம்பவம்: கைது செய்யப்பட்ட குற்றவாளி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி

நாமக்கல் குமாரபாளையத்தில் நடந்த கன்டெய்னர் கொள்ளை சம்பவத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒருவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



கோவை: நாமக்கல் குமாரபாளையத்தில் நடந்த கன்டெய்னர் கொள்ளை சம்பவத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒருவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



குமாரபாளையத்தில் சந்தேகத்திற்குரிய கன்டெய்னர் லாரியை காவல்துறையினர் துரத்திப் பிடித்தனர். அப்போது கன்டெய்னரில் கட்டு கட்டாக பணம் மற்றும் சொகுசு காருடன் 7 கொள்ளையர்கள் இருப்பது தெரியவந்தது. கொள்ளையர்கள் காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றனர். இதனால் காவல்துறையினர் கொள்ளையர்களில் ஒருவரை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட, மீதமுள்ள 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கொள்ளையர்களின் தாக்குதலில் காவல்துறையினருக்கும் காயம் ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட கொள்ளையர்களில் ஒருவர் முதலில் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.



தற்போது அவருக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டதால், கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.



Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...