கோவை குமரகுரு கல்லூரியில் 'Thalir Innovation Fest 2024' நடைபெற்றது

கோவையில் உள்ள குமரகுரு கல்லூரியில் 'Thalir Innovation Fest 2024' நடைபெற்றது. 45 நகரங்களில் இருந்து 3,800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அறிவியல் கண்காட்சி, தொழில்துறை காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டன.


கோவை: கோவையில் உள்ள குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியில் 'Thalir Innovation Fest 2024' நடைபெற்றது. யங் இந்தியன்ஸ் அமைப்பின் கோவை பதிப்பும் குமரகுரு கல்லூரியும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தன.



"INSPIRE our Younger Generation towards Building Bharat" என்ற கருப்பொருளுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் 45 நகரங்களில் உள்ள 153 பள்ளிகளிலிருந்து 3,800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.



மாணவர்களின் படைப்புத்திறன், நுண் சிந்தனைத் திறன், பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் திறன் உள்ளிட்ட திறன்களை வளர்க்கும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.



இந்நிகழ்வில் 30 அறிவியல் கண்காட்சி அரங்குகளும், 4 தொழில்துறை காட்சி அரங்குகளும் இடம் பெற்றன. இவை மாணவர்கள் அறிவியலின் பல்வேறு பிரிவுகள் குறித்து புரிந்து கொள்ளவும், தொழில்துறையில் தற்போதைய வளர்ச்சி பற்றி அறிந்து கொள்ளவும் உதவும் வகையில் அமைக்கப்பட்டன.



இயற்கை விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்டவற்றில் உள்ள தொழில்நுட்பங்கள், மோட்டார், ரோபோட், டிரோன் தொழில்நுட்பங்கள் குறித்த அரங்குகளை மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். குறிப்பாக இந்நிகழ்வின் சிறப்பம்சங்களில் ஒன்றான ஜவுளிக்கான அரங்கில் இடம்பெற்ற நேரடி கைத்தறி செயல்முறை விளக்கங்களை மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...