ஆனைமலையில் தொழிலாளி மற்றும் வன உயிரின புகைப்படக் கலைஞர் விபத்தில் உயிரிழப்பு

ஆனைமலையில் மில் தொழிலாளி இயந்திரத்தில் சிக்கி உயிரிழப்பு. பொள்ளாச்சி அருகே வன உயிரின புகைப்படக் கலைஞர் ஜீப் விபத்தில் பலி. இரு சம்பவங்களிலும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.


Coimbatore: ஆனைமலை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் நடந்த இரண்டு தனித்தனி விபத்துகளில் இரு நபர்கள் உயிரிழந்தனர்.

ஆனைமலை அருகே கரட்டுப்பாளையத்தை சேர்ந்த டிரைவர் ஆனந்தரசு (60) மனைவி தனலட்சுமி (58), அங்குள்ள மில்லில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்ற அவர், அதிகாலை 2:00 மணிக்கு வெப் கார்டிங் இயந்திரத்தில் வேலை செய்த போது, புடவை மாட்டி வலதுகை முட்டியில் காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மற்றொரு சம்பவத்தில், பொள்ளாச்சியை அடுத்த வேட்டைக்காரன்புதூரைச் சேர்ந்த ரோகித் காளிங்கராயன் (41), விவசாயி மற்றும் வன உயிரின புகைப்படக் கலைஞர், சேத்துமடையில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு ஜீப்பின் பின்பகுதியில் அமர்ந்து பயணம் செய்தார். ஓட்டுநர் பிரதீப் ஜீப்பை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டியதாக தெரிகிறது. வேகத்தடையில் ஜீப் ஏறியபோது ரோகித் காளிங்காராயன் தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தார். அவரை பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர், ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இரு சம்பவங்கள் குறித்தும் ஆனைமலை போலீஸார் நேற்று (செப்.26) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...