கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் தொகை வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு

கோவையில், கொரோனா சிகிச்சைக்கு காப்பீட்டு நிறுவனம் குறைவாக வழங்கிய தொகைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், கூடுதல் தொகை வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


Coimbatore: கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையம் கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு நேற்று (செப்டம்பர் 26) பிறப்பிக்கப்பட்டது.

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த நடராஜ் (60) என்பவர் 2020-ஆம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் சுந்தராபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மருத்துவ காப்பீடு செய்திருந்த நடராஜ், மருத்துவ சிகிச்சை செலவாக 2.87 லட்சம் ரூபாய் வழங்க கோரி விண்ணப்பித்தார். ஆனால், காப்பீட்டு நிறுவனம் 1.25 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கியது.

இதனால் அதிருப்தி அடைந்த நடராஜ், மீதித் தொகை மற்றும் இழப்பீடு கோரி கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஆணையத் தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள், மனுதாரருக்கு வழங்கப்பட வேண்டிய பாக்கித் தொகையில் 77,000 ரூபாய் திருப்பித் தர வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், இழப்பீடாக 7,000 ரூபாயும், வழக்குச் செலவாக 5,000 ரூபாயும் வழங்க வேண்டும் என்று காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவு மூலம், கொரோனா நோயாளிகளுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் போதுமான இழப்பீடு வழங்க வேண்டும் என்ற முக்கிய முன்னுதாரணம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது மற்ற நோயாளிகளுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...