'கீழடியில் புதிதாக ஒன்றும் கிடைக்கவில்லை' - புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவன பேராசிரியர் சுப்பராயலு கருத்து

கோவையில் நடைபெற்ற தமிழ்நாட்டின் அண்மைக்கால அகாழாய்வுகள் குறித்த தேசியக் கருத்தரங்கில், கீழடி அகழாய்வு குறித்து புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியர் சுப்பராயலு முக்கிய கருத்துக்களை தெரிவித்தார்.



Coimbatore: கோவை குமரகுரு கல்வி வளாகத்தில் தமிழ்நாட்டின் அண்மைக்கால அகாழாய்வுகள் குறித்த இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கம் இன்று துவங்கியது. நா.மகாலிங்கம் தமிழாய்வு மையம், வானவராயர் பவுண்டேசன் மற்றும் குமரகுரு கல்வி நிறுவனங்கள் இணைந்து இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளன.

இந்த கருத்தரங்கின் நோக்கம், தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட அண்மைக்கால அகழாய்வுகளில் கிடைத்த வரலாற்றுச் சான்றுகளைப் பகிர்ந்து கொள்வதும், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், கொங்கல்நகர் பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வாய்விற்கு களப்பயணம் செய்வதும் ஆகும்.



கருத்தரங்கின் முதல் நாளில், புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் இந்தியவியல் துறைத் தலைவர் சுப்பராயலு, குமரகுரு கல்வி நிறுவனங்களின் இணைத் தாளாளர் சங்கர் வாணவராயர், நா.மகாலிங்கம் தமிழாய்வு மையத்தின் இயக்குனர் ஜெகதீசன், தொல்லியல் துறை ஆளுமைகள், பேராசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நா.மகாலிங்கம் தமிழாய்வு மையத்தின் இயக்குனர் ஜெகதீசன் பேசுகையில், "அகழாய்வுகள் சம்பந்தமான ஆய்வறிக்கைகள் வருவதற்கு தாமதம் ஏற்படுகிற இந்த சூழலில், அந்தத் துறை சார்ந்த ஆளுமைகளை பேசவைத்து செய்திகளை மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையிலேயே, இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்திருப்பதாக" தெரிவித்தார்.



புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் இந்தியவியல் துறைத் தலைவர் சுப்பராயலு தனது உரையில், கீழடி அகழாய்வு குறித்து முக்கிய கருத்துக்களை தெரிவித்தார். அவர் கூறுகையில், "கீழடியில் வீடுகள் இருந்ததற்கான அமைப்புகள் கிடைக்கவில்லை. அது ஒரு தொழில் சார்ந்த இடமாக இருந்திருக்கலாம். தொல்பொருள்களைப் பொறுத்தவரை, தமிழகத்தின் மற்ற பகுதிகளில் நடைபெற்ற அகழ்வாய்வுகளில் கிடைத்த பொருட்களோடு ஒப்பிடுகையில் கீழடியில் புதிதாக ஒன்றும் கிடைக்கவில்லை. கீழடிக்கு என்ன சிறப்பு என்று புரியவில்லை" என்று தெரிவித்தார்.



கருத்தரங்கின் தொடர்ச்சியாக, பல்வேறு தலைப்புகளின் கீழ் அமர்வுகள் நடைபெற்றன. இதில் தொல்லியல் துறை சார்ந்த ஆளுமைகள் உரை நிகழ்த்தினர். பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் என நூற்றுக்கணக்கானோர் இந்த கருத்தரங்கில் பங்கேற்றனர்.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...

கோவையில் நடைபெற்ற புற்றுநோய் சிகிச்சை மாநாடு: நவீன நோய் எதிர்ப்புச் சிகிச்சை முறைகள் குறித்த விரிவான விவாதம்

கோவை KMCH மருத்துவமனையில் TAMPOS நடத்திய மூன்றாவது மாநாடு லீ மெரிடியன் ஹோட்டலில் மார்ச் 20 முதல் 22 வரை நடைபெற்றது. புற்...

கோவை P.N.புதூரில் பகத்சிங் மற்றும் வே.கௌதம்குமார் நினைவு தினம் அனுசரிப்பு

கோவை மேற்கு மண்டல P.N.புதூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பாக விடுதலை போராட்ட வீரர் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆ...