மேட்டுப்பாளையத்தில் போலி காவலர் கைது: இருசக்கர வாகன ஓட்டுநரிடம் ரூ.500 லஞ்சம் பெற்றது அம்பலம்

மேட்டுப்பாளையத்தில் போலி காவலராக நடித்து இருசக்கர வாகன ஓட்டுநரிடம் ரூ.500 லஞ்சம் பெற்ற நபர் கைது செய்யப்பட்டார். சம்பவம் நள்ளிரவில் நடந்தது, பின்னர் உண்மை காவல்துறையினரால் குற்றவாளி பிடிபட்டார்.


Coimbatore: மேட்டுப்பாளையத்தில் போலி காவலராக நடித்து இருசக்கர வாகன ஓட்டுநரிடம் ரூ.500 லஞ்சம் பெற்ற நபர் கைது செய்யப்பட்டார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கரட்டுமேடு பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்ற கூலித் தொழிலாளி, நேற்று இரவு மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் உள்ள திரையரங்கில் திரைப்படம் பார்த்து விட்டு நள்ளிரவில் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, அந்தச் சாலையில் நின்று கொண்டிருந்த ஒருவர், தான் ஒரு பயிற்சி காவலர் என்று கூறி வாகனச் சோதனை என்ற பெயரில் ஆவணங்களைக் கேட்டுள்ளார். மேலும், பெரியசாமியிடம் ரூ.500 பணம் வேண்டும், இல்லையென்றால் வழக்குப் பதிவு செய்வேன் என்று மிரட்டி லஞ்சம் வாங்கியுள்ளார்.

தொடர்ந்து சாலையில் சென்ற போது மற்றொரு பகுதியில் உண்மையான காவல்துறையினர் நிற்பதைப் பெரியசாமி பார்த்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த பெரியசாமி, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, அது குறித்து காவல்துறையினரிடம் தெரிவித்தார். பின்னர், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், குற்றவாளி காரமடை பெரிய தொட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ரங்கசாமியின் மகன் பிரகாஷ் (40) என்பது தெரிய வந்தது. பஞ்சர் கடை நடத்தும் அவர், போலி காவலராக நடித்து வந்தது அம்பலமானது.

பிரகாஷை கைது செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...