நிர்பயா வழக்கில் நால்வருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்

கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி நண்பருடன் பேருந்தில் பயணித்து கொண்டிருந்த மருத்துவ மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

பெண்ணியத்தின் குரல்வளையை நசுக்கும் விதமான இந்த கோர சம்பவம் நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தொடர்ந்து, மக்களின் மனதில் எழுச்சி தோன்றி பெரும் போராட்டங்களுக்கு வித்திட்டது. கொலை செய்யப்பட்ட மாணவியின் பெயருக்கு பதிலாக இந்த வழக்கிற்கு நிர்பயா என்று பெயரிடப்பட்டது.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பத்தை அரங்கேற்றிய அந்த 6 பேருக்கும் கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என்று பல்வேறு மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். இக்கொலை தொடர்பாக 18 வயதான சிறுவன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். ஒரு இளம் குற்றவாளி 3 ஆண்டு சிறை தண்டனைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

சிறையில் இருந்த 5 நபர்களின் முக்கிய குற்றவாளியான ராம்சிங் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். மீதமுள்ள 4 பேருக்கு மரண தண்டனை விதித்து டெல்லி கீழ் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை கடந்த 2014 டெல்லி உயர்நீதி மன்றமும் உறுதி செய்தது. 

இந்த நிலையில், குற்றவாளிகள் தரப்பில் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.பானுமதி, அசோக் பூஷன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் இன்று மதியம் 2 மணியளவில் வெளியிட்டனர். அதில், நிர்பயா பாலியல் வன்கொடுமை சம்பவம் நாட்டையே உலுக்கிய ஒன்று என்றும், குற்றவாளிகளுக்கு எதிரான ஆதாரங்களும், சாட்சியங்களும் பலமாக உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், இது காட்டுமிராண்டித்தனமான படுகொலை என்று கூறி, 4 பேரின் மரண தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...