கோவை கவுண்டம்பாளையத்தில் செந்தில் பாலாஜியின் ஜாமீனை கொண்டாடிய திமுகவினர்

கோவை கவுண்டம்பாளையத்தில் திமுக கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை கொண்டாடும் விதமாக பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது.



கோவை: கோவை கவுண்டம்பாளையத்தில் திமுக கவுண்டம்பாளையம் பகுதி கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை கொண்டாடும் விதமாக பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

சட்ட விரோத பண பரிமாற்ற புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் திமுக-வினர் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக திமுக கவுண்டம்பாளையம் பகுதி கழகம் சார்பில் பகுதி செயலாளர் ஜெ.எஸ்.சரத்விக்னேஷ் தலைமையில் பாட்டாசுகள் வெடித்து பொதுமக்கள், வாகனஓட்டிகள் மற்றும் பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கிக்கொண்டாடினர்.



இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் ஜவஹர், சுந்தரம், அவைத்தலைவர் சண்முகசுந்தரம், பகுதி துணைச்செயலாளர்கள் சங்கர், கண்ணகி, ஈஸ்வரன் பொருளாளர் வசந்த்குமார், மாவட்ட பிரதிநிதி லோகநாதன், சனில்குமார், மாமன்ற கவுன்சிலர்கள் சுபஸ்ரீ சரத், கிருஷ்ணமூர்த்தி, சம்பத், வட்டசெயலாளர்கள் குட்டி என்கிற வேலுச்சாமி, ரமணன், குமரேசன், காளிதாஸ், தன்ராஜ், நிர்வாகிகள் எம்.கே.தாஸ், மின்னல் சுரேஷ், ராசு, சேகர், ரவி, ஜனா, மணி, ஆறுமுகம். ஈஸ்வரன், சங்கர், செந்தில் உட்பட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...