மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை பகுதிகளில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் விடுதலையை கொண்டாடிய திமுகவினர்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து, கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை பகுதிகளில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.


கோவை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 471 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து, கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.



காரமடை கிழக்கு ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். காரமடை அருகே தென் திருப்பதி நால்ரோடு பகுதியில், காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ். எம். டி. கல்யாணசுந்தரம் தலைமையில் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளேபாளையம் ஊராட்சி நால்ரோடு பகுதியில், ஊராட்சி தலைவர் பிரஸ் சிவகுமார் தலைமையிலும், துணைத் தலைவர் சுரேந்திரன் முன்னிலையிலும் கொண்டாட்டம் நடைபெற்றது. கோவை மாவட்ட அறநிலையத்துறை அறங்காவலர் குழு உறுப்பினர் கவிதா கல்யாண சுந்தரமும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.



மேட்டுப்பாளையம் நகரில், நகர திமுக சார்பில் நகர செயலாளர்கள் முனுசாமி, முகமது யூனூஸ் ஆகியோர் தலைமையிலும், முன்னாள் எம்எல்ஏ பா.அருண்குமார் முன்னிலையிலும் கொண்டாட்டம் நடைபெற்றது.



அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தும், பேருந்து நிலையம் அருகே பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் திமுகவினர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Newsletter

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...

பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் மற்றும் வனங்கள் தினம் கொண்டாடப்பட்டது

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் மார்ச் 28 அன்று கொ...

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...