கேரளாவிற்கு சட்டவிரோதமாக கனிம வளங்கள் கடத்திய 4 டிப்பர் லாரிகள் பறிமுதல்: ரூ.3.25 லட்சம் அபராதம்

பொள்ளாச்சி அருகே தமிழக-கேரள எல்லையில் போக்குவரத்து துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி கனிம வளங்களை கடத்திய 4 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ரூ.3.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.



Coimbatore: பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கல் குவாரிகளில் இருந்து அரசுக்கு வரி செலுத்தாமல், உரிய ஆவணங்கள் இன்றி, அரசு நிர்ணயித்துள்ள அளவைவிட கூடுதலாக கனிம வளங்கள் கேரளாவிற்கு கடத்தப்படுவதாக வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதனையடுத்து சென்னை போக்குவரத்து இணை ஆணையர் சுரேஷ் மற்றும் பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து ஆணையர் நாகராஜன் தலைமையிலான குழுவினர் கோபாலபுரம், கோவிந்தாபுரம் உள்ளிட்ட தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர்.



இந்த சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றியும், வரி செலுத்தாமலும், அதிக பாரம் ஏற்றிச் சென்ற 4 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இந்த லாரிகளுக்கு ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இது தொடர்பாக போக்குவரத்து இணை ஆணையர் சுரேஷ் கூறுகையில், "அரசு விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றாமல் அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நடவடிக்கை மூலம், சட்டவிரோதமாக கனிம வளங்களை கடத்துவதை தடுக்கவும், அரசுக்கு வரி வருவாயை உறுதி செய்யவும் போக்குவரத்து துறை முனைப்புடன் செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...