கோவையில் இரைப்பை உணவுக்குழாய் முதல் சர்வதேச மாநாடு மற்றும் செயல் விளக்க கருத்தரங்கம்

உணவுக்குழாய் மற்றும் இரைப்பை நோய்க்கான முதல் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் செயல் விளக்க கருத்தரங்கம் வருகிற மே மாதம் 11-ம் தேதி முதல் 15ம் தேதி வரை கோவையில் நடைபெறவுள்ளது.

ஜெம் மருத்துவமனை சார்பில் நடத்தப்படும் இம்முகாமில் வாழ்க்கை முறை, உணவு பழக்கவழக்கம் மற்றும் சுற்றுப்புற சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் உணவுக்குழாய் இரைப்பையில் ஏற்படும் நோய்கள் குறிப்பாக, நெஞ்செரிச்சல் மற்றும் புற்றுநோய்கள் உள்ளிட்டவை குறித்து விளக்கப்படவுள்ளது.

மேலும், உணவுக்குழாய் இரைப்பை நோய் சிகிச்சைக்காக ஐஎஸ்இஎஸ் இரண்டு ஆண்டுகளுக்கு முன் மும்பையில் நடைபெற்றது. உலகப்புகழ் பெற்றவரும், ஜெம் மருத்துவமனை தலைமை மருத்துவருமான சி.பழனிவேலு ஒருமனதாக தலைவராக தேர்வு பெற்றார். டாடா மெமோரியல் கேன்சர் மருத்துவமனை மருத்துவர் பிரமேஷ் செயலாலராகவும் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 15 மருத்துவர்கள் செயல் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

மருத்துவர் பழனிவேலு தலைமையில் மருத்துவர் பார்த்தசாரதி, ரமேஷ், பரத் ஆகியோர் இம்மருத்துவ மாநாட்டை நடத்துகின்றனர். இம்மாநாட்டில் கொரியாவைச் சேர்ந்த ஹயுங், டி.ஜே.கிம், ஜப்பானைச் சேர்ந்த கௌஸ்க் நருமியா, ஹர்ஸி ஒசுகி, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பீட்டர் வார்வல்டு, சீனாவைச் சேர்ந்த லி கௌஸின் குந்தான் ஆகிய வெளிநாடுகளில் இருந்து புகழ்பெற்ற பேராசிரியர்களும், 350-க்கும் மேற்பட்ட மருத்துவர்களும் பங்கேற்கின்றனர். மேலும், இந்தியாவில் பல பகுதிகளில் இருந்து இந்த மாநாட்டிற்கு இத்துறையைச் சார்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள், பேராசிரியர்கள் பங்கேற்கவுள்ளனர்.

சிறுதுளை லேப்பிராஸ்கோப் இன்றைய தினத்தில் சிறந்த அறுவை சிகிச்சை முறையாகும். ரோபோட்டிக்கில் இன்னும் துல்லியமாகவும், முழுமையாக புற்று கட்டியை அகற்றுவது சாத்தியம்.

வரும், 7ம் தேதி வயிறு சம்பந்தப்பட்ட இலவச மருத்துவ முகாம் கோவை ஜெம் மருத்துவமனையில் நடைபெறுகிறது. நெஞ்செரிச்சல், ஹெர்னிய வீக்கம், கேன்சர், கல்லீரல் கோளாறுகள் உள்ளவர்கள் இலவச அலோசனை பெறலாம். அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு 50 சதவிகித சலுகையும் புற்றுநோய் அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக அளிக்கவும் கோவை ஜெம் மருத்துவமனை அறக்கட்டளை, கோயம்புத்தூர் ரோட்டரி புறுநோய் உயிர்காக்கும் அறக்கட்டளை இணைந்து செயல்படுகிறது. இம்முகாமில் பங்கேற்க 04222325100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...