கோவை விமான நிலைய விரிவாக்கப்பணிக்காக அவ்விமான நிலைய வளாகத்தில் இருந்த வேப்ப மரங்கள் ஓசை அமைப்பின் சையது தலைமையிலான குழுவினரால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டு விமான நிலையத்தின் மாற்று இடத்தில் நடவு செய்யப்பட்டது.

இம்மரங்கள் ஆரோக்கியமாக வளர மண்புழு, சாணம், வக்கிப்புல், தென்னை நார் உள்ளிட்ட இயற்கை உரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது, கோவை விமான நிலையம் வளாகத்தில் மறுநடவு செய்யப்பட்ட 6 வேப்பமரங்களில் முதல் மரம் பல இடங்களில் துளிர்விட்டு வளரத்துவங்கி விட்டன. இடமாற்றம் செய்யப்பட்ட மரம் துளிர்விட்ட நிகர்வு இப்பணியில் ஈடுபட்ட அனைத்துத் தரப்பினரிடையேயும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.