காங்கேயத்தில் பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாள் விழா: அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் பொள்ளாச்சி வ. ஜெயராமன், தமோதிரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சென்னிமலை சாலையில் அமைந்துள்ள திடலில் பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அதிமுக சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு காங்கேயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஒன்றிய கழக செயலாளருமான என்.எஸ்.என். நடராஜன் தலைமை தாங்கினார். காங்கேயம் நகரச் செயலாளர் வெங்கு ஜி. மணிமாறன் முன்னிலை வகித்தார்.



சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் அமைச்சரும் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளருமான பொள்ளாச்சி வ. ஜெயராமன் மற்றும் முன்னாள் அமைச்சரும் கழக அமைப்பு செயலாளருமான தமோதிரன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவின் தொடக்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. என்.என்.நடராஜ் வரவேற்புரை ஆற்றினார். வருகை தந்த அனைத்து நிர்வாகிகளுக்கும் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது.



முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி வ. ஜெயராமன் தனது உரையில், பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் சாதனைகளை நினைவுகூர்ந்தார். தற்போதைய கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமியின் பங்களிப்பையும் அவர் பாராட்டினார். ஜெயலலிதாவின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், கொரோனா காலத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடுகள் குறித்தும் அவர் விளக்கினார்.



"அதிமுக கட்சி என்பது தங்கம் போன்றது, ஒவ்வொரு முறையும் சுட்டெரிக்கும் போது தரம் குறையாமல் மேலும் மேலும் மெருகேறும். அதுபோல கண்டிப்பாக அதிமுக அடுத்த தேர்தலில் ஆட்சி அமைக்கும் என்பது சத்தியம்," என்று ஜெயராமன் தனது உரையை முடித்தார்.

Newsletter

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...