தொண்டாமுத்தூர் அருகே சட்டவிரோத மது விற்பனை: டாஸ்மாக் கடை சீல் வைப்பு

கோவை தொண்டாமுத்தூர் அருகே சட்டவிரோத மது விற்பனை புகார் அடிப்படையில் காவல்துறை திடீர் சோதனை நடத்தியது. அதிகாரிகள் டாஸ்மாக் கடையை சீல் வைத்தனர். வித்தியாசமான முறையில் சீல் வைக்கப்பட்டது நகைச்சுவையை ஏற்படுத்தியது.


Coimbatore: கோவை தொண்டாமுத்தூரில் இருந்து நரசிபுரம் செல்லும் சாலையில் அதிகாலைகளில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், இன்று (செப்டம்பர் 22) காவல்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது, அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், அங்கு செயல்பட்டு வந்த டாஸ்மாக் பார் முழுவதையும் தகர தகடுகளைக் கொண்டு மூடி சீல் வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.



பேரூர் தாசில்தார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றார். அவர், டாஸ்மாக் பார் கடையின் ஊழியர்கள் படுத்து உறங்க வைத்திருந்த இரண்டு வயர் கட்டில்களை எடுத்து ஒன்றிணைத்து, அதில் கம்பி கட்டி பூட்டி சீல் வைத்தார். இந்த வித்தியாசமான முறையில் சீல் வைக்கப்பட்டதை பார்த்த மது பிரியர்கள் நகைச்சுவையாக பேசிக்கொண்டு சென்றனர்.

உயர் அதிகாரிகள் தகர தகடுகளை முழுவதுமாக மூடி சீல் வைக்க உத்தரவிட்டிருந்த நிலையில், படுத்து உறங்கும் வயர் கட்டில் வைத்து மூடி சீல் வைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே வித்தியாசமான கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த நடவடிக்கை சட்டவிரோத மது விற்பனையை தடுக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...

பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் மற்றும் வனங்கள் தினம் கொண்டாடப்பட்டது

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் மார்ச் 28 அன்று கொ...

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...