கோவை கொங்கு நண்பர்கள் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு பாராட்டு விழா

கோவையில் கொங்கு நண்பர்கள் சங்கம் சார்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், தேசிய அளவில் சாதனை படைத்த மாணவர்களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது. ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜ் பரிசுகள் வழங்கினார்.


Coimbatore: கோவை கொங்கு நண்பர்கள் சங்கம் சார்பாக 2023-2024-ம் கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் பிற துறைகளில் தேசிய அளவில் சாதனை படைத்த மாணவ, மாணவியர்களை ஊக்குவிக்கும் விதமாக கோவை நவ இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினார். மேலும் அதனை தொடர்ந்து இந்த விழாவில் வின்னர்'ஸ் இண்டியா நிறுவனர் C.K கண்ணன் நான்கு மாணவர்களுக்கு தலா இரண்டு சென்ட் நிலங்களை இலவசமாக வழங்கினார்.



நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற தமிழ்நாடு காவல்துறை தலைவர் பாரி IPS, டாலர் குரூப் ராமமூர்த்தி, கோவை கொங்கு நண்பர்கள் சங்கம் தலைவர் ராஜ்குமார், துணை தலைவர் நந்தகுமார், இணைச் செயலாளர் லோகநாதன், செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் அழகேசன், இந்துஸ்தான் கல்விக் குழுமம் சரஸ்வதி கண்ணையன் ஆகியோர் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

Newsletter

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...