கோவை நரசிபுரத்தில் குட்டிகளுடன் யானைக் கூட்டம் - வனத்துறை விரட்டியடிப்பு

கோவை நரசிபுரத்தில் 7-க்கும் மேற்பட்ட யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டன. வனத்துறையினர் அவற்றை காட்டுக்குள் விரட்டியடித்தனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



Coimbatore: கோவையில் உள்ள நரசிபுரம் பகுதியில் குட்டிகளுடன் 7-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டம் முகாமிட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (செப்டம்பர் 21) நடந்தது.

கடந்த சில மாதங்களாக கோவையின் பேரூர், மருதமலை, மதுக்கரை, தடாகம், வடவள்ளி, தொண்டாமுத்தூர் ஆகிய சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் யானைகள் தொடர்ந்து வீடுகள் மற்றும் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், நரசிபுரம் பகுதியில் குட்டிகளுடன் கூடிய யானைக் கூட்டம் முகாமிட்டிருந்தது.



இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், யானைக் கூட்டம் விவசாய தோட்டங்களுக்குள் நுழையாமல் தடுக்க முயற்சி செய்தனர். பின்னர், அடர்ந்த வனப்பகுதிக்குள் யானைகளை விரட்டியடித்தனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். குட்டிகளுடன் யானைக் கூட்டம் வனப்பகுதிக்குள் செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி இன்று (செப்டம்பர் 22) வைரலாகி வருகின்றன.

வனத்துறையினர் தொடர்ந்து அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், யானைகள் மீண்டும் அப்பகுதிக்கு வராமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Newsletter

Coimbatore Police Museum to Offer Free Entry on September 6 for Police Day

The Tamil Nadu Police Museum in Coimbatore will offer free entry to the public and school and college students on Septem...

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...