அன்னூர் அருகே வாக்கனாங்கொம்பு கிராமத்தில் கிராவல் மண் எடுப்பதற்கு எதிர்ப்பு: பொதுமக்கள் லாரிகளை சிறைபிடித்து போராட்டம்

கோவை மாவட்டம் அன்னூர் அருகே வாக்கனாங்கொம்பு கிராமத்தில் கிராவல் மண் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் லாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலத்தடி நீர் பாழாதல் போன்ற காரணங்களை முன்வைத்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்கனாங்கொம்பு பகுதியில் அரசு அனுமதியுடன் கிராவல் மண் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோவை கனிமவளத்துறை அதிகாரிகள் அனுமதி பெற்று திண்டுக்கல்லை சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் கிராவல் மண் எடுத்து விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில், கிராவல் மண் எடுப்பதால் தங்கள் கிராமத்தின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும், எதிர்வரும் தலைமுறையினருக்கு நிலத்தடி நீர் பாழாகும் என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர் அப்பகுதி மக்கள். மேலும், அதிக அளவில் லாரிகள் கிராம சாலைகள் வழியாக சென்று வருவதால் சாலை சேதம் அடைவதாகவும் குற்றம் சாட்டினர். இதனால், கிராவல் மண் எடுக்க அதிகாரிகள் அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி கிராவல் மண் எடுத்து வந்த லாரிகளை சிறைப்பிடித்து வாக்கனாங்கொம்பு ஊர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இது குறித்த தகவல் அறிந்து வந்த அக்கரை செங்கப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அன்னூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், உரிய அனுமதி உள்ளதா என ஒப்பந்ததாரரிடம் ஆவணங்களை சரிபார்த்தனர்.

கோவை கனிமவளத்துறை அதிகாரிகளின் அனுமதி கடிதம் பெற்று கிராவல் மண் அள்ளப்படும் நிலையில், பொதுமக்கள் தங்கள் கிராமத்தில் மண் எடுக்க அனுமதி கொடுக்க கூடாது என்றும், அதை தாங்கள் ஏற்க மாட்டோம் என்றும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, கிராவல் மண் எடுக்கும் பணியை நிறுத்துமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

அதிகாரிகள் மண் எடுக்க வேண்டாம் என ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதை எழுத்துப்பூர்வமாக எழுதி கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகளை சந்தித்து மனு அளிக்க அறிவுறுத்தினர். புகார் குறித்து மாவட்ட நிர்வாகம் பரிசிலித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என அதிகாரிகள் தெரிவித்ததன் பேரில் பொதுமக்கள் லாரிகளை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Newsletter

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...