கற்பகம் பல்கலைக்கழகத்தின் 15-ஆவது பட்டமளிப்பு விழா: 2644 மாணவர்களுக்கு பட்டம்

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தின் 15-ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2644 மாணவர்கள் பட்டம் பெற்றனர். டாக்டர் A.வேலுமணி முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார்.


கோவை: கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தின் 15-ஆவது பட்டமளிப்பு விழா 21.09.2024 சனிக்கிழமையன்று நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் கு.இராமசாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், கற்பகம் கல்விக்குழுமங்களின் தலைவர் டாக்டர் இராச.வசந்தகுமார் முன்னிலை வகித்தார்.



விழாவில் தமயந்தி வசந்தகுமார், முதன்மைச்செயல் அலுவலர் க. முருகையா, துணைவேந்தர் டாக்டர் ப.வெங்கடாசலபதி, பதிவாளர் முனைவர் சு.இரவி, தேர்வாணையர் முனைவர் ப.பழனிவேலு மற்றும் முதன்மையர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



தைரோகேர் அமைப்பாளர் டாக்டர் A.வேலுமணி முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி, பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்தினார்.



அவரது உரையில், "பண்பட்ட கல்வியே சமுதாய வளர்ச்சிக்கு அடிப்படை. தனிமனித ஒழுக்கத்திலும், சமுதாயப் பொறுப்புணர்விலும், திறன் மேம்பாட்டிலும் சிறந்த மாணவர்கள் உயர்ந்த சமுதாயத்தைக் கட்டமைக்கின்றனர். அவர்களது பெருமுயற்சிக்கு கல்வியே தலைச்சிறந்த கருவி. நாட்டின் உயர்வே அவர்களது கல்வியின் பெரும்பயன்" என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர், "மாணவர்கள் அத்தகைய பொதுநல நோக்கத்துடன் சிறந்த ஆளுமைகளாக மிளிர வேண்டும். புதிய கல்விக்கொள்கை முதலானவை திறன் மேம்பாட்டிற்கும், ஆளுமை வளர்ச்சிக்கும் துணைசெய்வதை மாணவர்கள் உணர வேண்டும். அவர்கள் தமது ஆய்வுப்பங்களிப்பின் வாயிலாக நாட்டின் அனைத்துத் துறைச்சார்ந்த வளர்ச்சிக்கும் ஆக்கம் சேர்க்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் இந்திய மாணவர்களின் அறிவும், ஆளுமையும் முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்ட டாக்டர் A.வேலுமணி, "மாணவர்கள் இதனை உணர்ந்து அடிப்படைக் கல்வி, மருத்துவம் முதலானவற்றுடன் அறிவியல் ஆக்கமும், தொழில்நுட்ப வளர்ச்சியும் அனைத்து மக்களையும் சென்றடைவதற்கு பொதுநல நோக்கத்தில் உழைக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.





இந்த பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 2644 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.





அதில் 51 மாணவர்களுக்குத் தங்கப்பதக்கங்களும், பல்வேறு துறைகள் சார்ந்த 52 ஆய்வாளர்களுக்கு முனைவர் பட்டமும் வழங்கப்பட்டன.

Newsletter

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...