கோவையில் தலைமறைவாக இருந்த கொலை வழக்கு குற்றவாளி சுட்டுப் பிடிப்பு

கோவையில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி ஆல்வின், காவல்துறையினரை தாக்க முயன்றபோது, தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தி பிடிக்கப்பட்டார். காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.


கோவையில் கடந்த ஒரு வருடமாக தலைமறைவாக இருந்த கொலை வழக்கு குற்றவாளி ஆல்வின், காவல்துறையினரால் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடிக்கப்பட்டுள்ளார்.

கோவை மாநகர காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை காவல்துறையினர், ரவுடி ஆல்வினை தேடி வந்தனர். கோவை கொடிசியா வளாகப் பகுதியில் ஆல்வின் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படையினர் அப்பகுதிக்கு சென்றனர்.

காவல்துறையினரை கண்டதும் ஆல்வின் கத்தியால் தாக்க முயன்றார். இதில் தலைமை காவலர் ராஜ்குமாரின் இடது மணிக்கட்டில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. மேலும் மற்ற காவலர்களையும் தாக்கி தப்ப முயன்ற ஆல்வினை, தற்காப்புக்காக உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் கை துப்பாக்கியால் சுட்டு பிடித்தார்.



துப்பாக்கிச் சூட்டில் ஆல்வினின் இரண்டு கால்களிலும் காயம் ஏற்பட்டது. காயமடைந்த ஆல்வினுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆல்வின் மீது 3 கொலை வழக்குகள், 4 கொலை முயற்சி உள்ளிட்ட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களை தடுக்க கோவை காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பிரபல ரவுடி ஆல்வின் காவல்துறையினரை தாக்க முயன்றதும், அவரை சுட்டு பிடித்ததும் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...