கோவை மாநகராட்சி ஆணையாளர் பாதாள சாக்கடை மற்றும் சாலை சீரமைப்பு பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் வார்டு 1-ல் பாதாள சாக்கடை திட்டப்பணிகளையும், வார்டு 5-ல் சாலை சீரமைப்பு பணிகளையும் நேரில் ஆய்வு செய்தார். பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Coimbatore: கோவை மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் IAS, இன்று (செப்டம்பர் 20) மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அடிப்படை கட்டமைப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

முதலில், வடக்கு மண்டலத்தின் வார்டு எண் 1-க்குட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம் மற்றும் கேப்டவுன் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை ஆணையாளர் பார்வையிட்டார். இப்பணிகளை விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



இந்த ஆய்வின் போது, உதவி ஆணையர் ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் எழில், மாமன்ற உறுப்பினர் கற்பகம், மண்டல சுகாதார அலுவலர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் ஜெயின்ராஜ், சுகாதார ஆய்வாளர் பவுன்ராஜ் மற்றும் பிற மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.



அடுத்ததாக, ஆணையாளர் கிழக்கு மண்டலத்தின் வார்டு எண் 5-க்குட்பட்ட விஸ்வாசபுரம் பகுதிக்குச் சென்றார். அங்கு நடைபெறும் சாலை சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த அவர், இப்பணிகளையும் விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.



இந்த ஆய்வின் போது, உதவி ஆணையர் முத்துச்சாமி, உதவி செயற்பொறியாளர் ராஜேஸ்கண்ணா, மாமன்ற உறுப்பினர் நவீன்குமார், மண்டல சுகாதார அலுவலர் விஜயகுமார், உதவி பொறியாளர் கணேசன் மற்றும் பிற மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...