பொள்ளாச்சியில் வீட்டில் வளர்த்த பூனை கொண்டு வந்த பாம்பால் பெண் உயிரிழப்பு

பொள்ளாச்சி நேரு நகரில், வீட்டில் வளர்த்த பூனை தெருவில் இருந்த பாம்பை உள்ளே கொண்டு வந்ததால், தூங்கிக் கொண்டிருந்த 58 வயது பெண் பாம்பு கடியால் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Coimbatore: பொள்ளாச்சி நேரு நகர் பகுதியில் வசித்து வந்த சாந்தி (58) என்ற பெண், தனது மகன் சந்தோஷுடன் வாழ்ந்து வந்தார். கடந்த ஓராண்டுக்கு முன்பு அவரது கணவர் ரவி உயிரிழந்தார். சாந்தி தனது வீட்டில் ஒரு பூனை குட்டியை ஆசையாக வளர்த்து வந்தார்.

சம்பவம் நடந்த நாளன்று, வீட்டு வளாகத்தில் ஒரு கொடிய விஷப் பாம்பு சுற்றித் திரிந்தது. இதனைக் கண்ட பூனை, அந்தப் பாம்பைப் பிடித்து வீட்டுக்குள் கொண்டு வந்தது. அப்போது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சாந்தியை பாம்பு கடித்தது.

சாந்தியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சாந்தி உயிரிழந்தார்.

வீட்டில் செல்லமாக வளர்த்த பூனையே உயிருக்கு வினையானது என்ற இந்த சோக சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...