கரூரில் இருந்து திருட்டுத்தனமாக மணல் திருடிவந்த லாரியை சிறைபிடித்த சூலூர் லாரி உரிமையாளர்கள்

கரூரில் இருந்து ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புடைய மணலை திருட்டுத்தனமாக கொண்டு வந்த லாரிகளை சூலூர் லாரி உரிமையாளர்கள் சிறைபிடித்தனர்.

தமிழக அரசு தமிழகம் முழுவதும் உள்ள குவாரிகளில் மணல் எடுக்க தடை விதித்துள்ளது. இதைத்தொடர்ந்து தொடர்ச்சியாக கரூர் மற்றும் திருச்சி பகுதிகளில் உள்ள குவாரிகளில் மணல் திருடப்பட்டு வந்தது.

இது குறித்து உரிய சோதனை மேற்கொள்ள அனைத்து சோதனைச் சாவடிகளுக்கும் அரசு அறிவுறுத்தியிருந்தாலும், காவல்துறைக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்துவிட்டு திருட்டு மணல் விற்பனை படுஜோராக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.



இந்நிலையில் இன்று அதிகாலை கரூரில் இருந்து 12 சக்கரம் கொண்ட நான்கு லாரிகளில் 36 யூனிட் மற்றும் 10 சக்கரம் கொண்ட ஒரு வாகனத்தில் 3.5 யூனிட் மணலும் விற்பனைக்காக கொண்டு வரும்போது சூலூர் மணல் லாரி உரிமையாளர்கள் வட்டாட்சியர் பழனி முன்னிலையில் சிறைபிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, மணல் லாரிக்கு முன்பாக வந்த காரில் இருந்தவர்கள் வட்டாட்சியரை லாரிகளை விடச்சொல்லி மிரட்டியுள்ளனர். இதைத்தொடர்ந்து, சூலூர் மணல் லாரி உரிமையாளர்கள் மிணல் திருடி வந்தவர்களை எதிர்த்த நிலையில், காரில் வந்தவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

தமிழக அரசு உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மணல் குவாரிகள் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...