'வனத்துறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை TNPSC மூலம் நிரப்ப உள்ளோம்' - வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்

கோவையில் நடைபெற்ற 27வது மாநில வனத்துறை விளையாட்டுப் போட்டிகளின் துவக்க விழாவில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்றார். வனத்துறையில் உள்ள காலிப் பணியிடங்கள், யானைகள் பாதுகாப்பு குறித்து அவர் பேசினார்.



கோவை: கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மாநில வனக்கல்லூரி விளையாட்டுத் திடலில் இன்று (செப்.19) 27வது மாநில வனத்துறை விளையாட்டுப் போட்டிகளுக்கான துவக்க விழா நடைபெற்றது.



இவ்விழாவில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்துகொண்டு விளையாட்டு போட்டிகளை துவக்கிவைத்தார்.



இந்நிகழ்வில் கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிச் செல்வன், முதன்மை வனப்பாதுகாவலர் மற்றும் வனத்துறை தலைவர் சுதான்சு குப்தா, சுற்றுச்சூழல், காலநிலை மற்றும் வனத்துறை அரசு முதன்மை செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



அமைச்சர் மதிவேந்தன், பல்வேறு வன மண்டலங்களைச் சேர்ந்த படை அணியினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, ஒலிம்பிக் ஜோதியை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

விழாவிற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மதிவேந்தன், "27வது மாநில வனத்துறை விளையாட்டுப் போட்டிகளில் தேர்வாகும் வீரர்கள், அகில இந்திய வனத்துறை விளையாட்டு போட்டிகளில் பங்கு பெறுவார்கள். வனத்துறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. இவற்றை TNPSC மூலம் நிரப்ப உள்ளோம்," என்றார்.

மேலும் அவர், "யானை வழித்தடங்களை கண்டறிந்து ஆராய்ந்து வருகிறோம். தமிழ்நாட்டில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது வனத்துறையின் சிறப்பான செயல்பாட்டிற்கான அறிகுறி. யானை-மனித மோதலைத் தடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்," என்று குறிப்பிட்டார்.

வனவிலங்கு பிரச்சனைகள் குறித்து பேசிய அமைச்சர், "எல்லா இடங்களிலும் வனவிலங்கு பிரச்சனைகள் உள்ளன. பிரச்சனைகள் அதிகமாக உள்ள இடங்களில் அதிக கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். மருதமலை அருகே உள்ள குப்பை கிடங்கை அகற்றும் நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பேசுவோம்," என்றார்.

இறுதியாக, "வேட்டை தடுப்பு காவலர்களின் ஊதிய உயர்வு குறித்து பரிசீலித்து வருகிறோம். நன்னீர் நாய்கள் அழிவு குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்போம். வரையாடு பாதுகாப்பில் அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது," என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

Newsletter

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...