பொள்ளாச்சி V. ஜெயராமன் வகுத்தம்பாளையம் கிராமத்தில் புதிய நியாய விலைக் கடையை திறந்து வைத்தார்

பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் V. ஜெயராமன் செப்டம்பர் 18 அன்று வகுத்தம்பாளையம் கிராமத்தில் புதிய நியாய விலைக் கடையை திறந்து வைத்தார். இந்த கடை பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டது.


கோவை: பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியின் கிணத்துக்கடவு கிழக்கு ஒன்றியம், தேவனாம்பாளையம் ஊராட்சியில் உள்ள வகுத்தம்பாளையம் கிராமத்தில் புதிய நியாய விலைக் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த கடையை பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்து கட்டப்பட்டுள்ளது.



செப்டம்பர் 18 அன்று, முன்னாள் அமைச்சரும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினரும், கழகத் தேர்தல் பிரிவு செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளருமான முனைவர் பொள்ளாச்சி V. ஜெயராமன் இந்த புதிய நியாய விலைக் கடையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். அவர் கடையின் விற்பனையையும் துவக்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அதிமுக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் ஆணைக்கிணங்க, V. ஜெயராமன் கழகத்தின் புதிய உறுப்பினர் அட்டைகளை தேவனாம்பாளையம் மற்றும் வகுத்தம்பாளையம் கிளை கழக உறுப்பினர்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்வில் அவர் சிறப்புரையும் ஆற்றினார்.

Newsletter

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...