கோவை வடக்கு வட்டத்தில் கலெக்டர் கிராந்தி குமார் பாடி தங்கியுள்ளார்; CRPF வளாகத்தில் தீவிர பாதுகாப்பு

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கோவை கலெக்டர் கிராந்தி குமார் பாடி பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, CRPF பயிற்சி கல்லூரி வளாகத்தில் தங்கியுள்ளார். யானைகள் நடமாட்டம் காரணமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை வடக்கு வட்டத்தில் உள்ள CRPF பயிற்சி கல்லூரி வளாகத்தில் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி தங்கியுள்ளார். தமிழ்நாடு அரசின் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் மாதத்திற்கு ஒரு வருவாய் வட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்த வட்டத்தின் உள்ளேயே ஏதாவது ஒரு கிராமத்தில் கலெக்டர் தங்க வேண்டும் என்பது இத்திட்டத்தின் முக்கிய அம்சமாகும்.

இந்த திட்டத்தின் அடிப்படையில், செப்டம்பர் 18 அன்று பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட கோவை வடக்கு வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர், அன்று இரவு CRPF வளாகத்தில் தங்கினார். இப்பகுதியில் இரவு நேரங்களில் யானைகளின் நடமாட்டம் உள்ளதால், CRPF வளாகத்திற்கு சுற்றியும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாநகர காவல் துறையினரும் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். கலெக்டருடன் ஆய்வு மேற்கொண்ட அனைத்து துறை அதிகாரிகளும் பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் அன்று இரவு தங்கினர். மேலும், மறுநாள் காலை 10 மணி வரை மீண்டும் இப்பகுதியில் பொதுமக்களின் குறைகளை கேட்க திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...