பாரதியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கான இறுதிச்சுற்று போட்டி

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில் மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கான இரண்டு நாள் இறுதிச்சுற்று போட்டி நடைபெறுகிறது.


Coimbatore: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் (EDII) சார்பில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கான இறுதிச்சுற்று நிகழ்வு இன்று (செப்டம்பர் 18) தொடங்கியது.



இந்த நிகழ்வில் EDII நிறுவனத்தின் இயக்குனர் ஆர். அம்பலவாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார். பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குழுவின் உறுப்பினர் முனைவர் லவ்லி நா லிட்டில் பிளவர் துவக்க உரை நிகழ்த்தினார். EDII நிறுவனத்தின் மாநில திட்ட மேலாளர் சி.சண்முகராஜ் கருத்துரை வழங்கினார். பல்கலைக்கழகத்தின் மைய ஒருங்கிணைப்பாளர் அனைவரையும் வரவேற்று பேசினார். EDII நிறுவனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி சரண்யா நன்றியுரை வழங்கினார்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த இறுதிப்போட்டியில் செப்டம்பர் 18 அன்று சென்னை, சேலம் மற்றும் கோயம்புத்தூர் மண்டலங்களைச் சேர்ந்த 29 அணிகளும், செப்டம்பர் 19 அன்று சிவகங்கை, திருநெல்வேலி மற்றும் திருச்சி மண்டலங்களைச் சேர்ந்த அணிகளும் பங்கேற்கின்றன. இந்த நிகழ்வை மேற்கூறிய மண்டலங்களின் அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களும் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த போட்டியானது மாணவர்களின் புத்தாக்கச் சிந்தனைகளை ஊக்குவிப்பதோடு, அவர்களின் கண்டுபிடிப்புகளை அங்கீகரிக்கவும், மேம்படுத்தவும் ஒரு தளத்தை வழங்குகிறது. இது மாணவர்களிடையே தொழில்முனைவோர் ஆர்வத்தை வளர்ப்பதோடு, அவர்களின் புதிய யோசனைகளை செயல்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 26 நிலவரம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் மார்ச் 26ஆம்...

நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஜெர்மன் ரயில் ஆர்வலர்கள் ரூ.3 லட்சம் வாடகை செலுத்தினர்

ஜெர்மனியைச் சேர்ந்த ரயில் ஆர்வலர்கள் குழு UNESCO அங்கீகாரம் பெற்ற நீலகிரி மலை ரயிலை ரூ.3 லட்சம் வாடகைக்கு எடுத்து குன்னூ...

தொழிலாளியை தாக்கி ஜாதி அவமதிப்பு: இருவருக்கு ஆயுள் தண்டனை

Coimbatore மலையாண்டிபட்டினம் பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளி பட்டீஸ்வரனை இரும்புக் கம்பியால் தாக்கி ஜாதி அவமதிப்பு...