கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை 2024-25 தொடக்கம்

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 2024-25 கல்வியாண்டிற்கான முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 16 முதல் தொடங்குகிறது. விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக மட்டுமே பெறப்படும்.


Coimbatore: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 16, 2024 முதல் தொடங்குவதாக அறிவித்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் முதுநிலை பட்ட மேற்படிப்பு பயிலகம் வாயிலாக 11 கல்வி வளாகங்களில் 34 துறைகளில் முதுகலைப் படிப்பும், 29 துறைகளில் முனைவர் பட்டப் படிப்பும் வழங்கப்படுகிறது. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளம் (https://admissionsatpgschool.tnau.ac.in/) மூலமாக மட்டுமே பெறப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 30, 2024 நள்ளிரவு 11.59 மணி வரை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இளங்கலை (வேளாண்மை) மற்றும் அதன் சார்ந்த படிப்புகளை முடித்த மாணவர்கள் முதுகலை பட்டப்படிப்பிற்கும், முதுகலை (வேளாண்மை) அல்லது தோட்டக்கலை / M.Tech (வேளாண் பொறியியல்) முடித்த மாணவர்கள் முனைவர் பட்டப்படிப்பிற்கும் விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பு சான்றிதழ் (Provisional Degree Certificate) அல்லது இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் முந்தைய பருவ மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இருப்பினும், பட்டப்படிப்பு சான்றிதழை சமர்பித்த பிறகே மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும்.

மாணவர்கள் முதுநிலை மாணவர் சேர்க்கை (2024-25) குறித்த தகவல் கையேட்டை படித்து, உரிய நேரத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் அல்லது 9489056710 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...