மேட்டுப்பாளையம் அருகே 35 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு குட்டையில் இருந்த முதலையை வனத்துறையினர் பிடித்தனர்

மேட்டுப்பாளையம் அருகே பட்டக்காரனூர் கிராமத்தில் குட்டையில் இருந்த முதலையை 35 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு வனத்துறையினர் பிடித்தனர். முதலை பவானிசாகர் அணைப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள குட்டையில் முதலை இருப்பதாக பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் குமார் தலைமையிலான வனத்துறையினர் அந்தப் பகுதியில் ஆய்வு செய்து முதலை இருப்பதை உறுதி செய்தனர்.

குட்டையில் 10 அடிக்கும் மேல் தண்ணீர் தேங்கி நிற்பதால், முதலையைப் பிடிக்க தண்ணீரை முழுவதுமாக அப்புறப்படுத்த திட்டமிடப்பட்டது. நேற்று காலை 11 மணி முதல் பெட்ரோல் மூலம் இயங்கும் மோட்டார் பம்ப்செட்டுகளைக் கொண்டு குட்டையில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

இன்று மதியம் 3 மணி அளவில் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு, முதலையை பிடிக்கும் பணி தொடங்கியது.



தண்ணீர் குறைந்தவுடன் அங்குமிங்கும் ஓடிய முதலையை, கயிற்றில் சுருக்கு வைத்து வனத்துறையினர் வெளியே எடுத்து வந்தனர்.



பிடிபட்ட முதலையின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு, உடல் ஆரோக்கியமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.



பின்னர், அந்த முதலையை பவானிசாகர் அணைப்பகுதிக்கு கொண்டு செல்ல வனத்துறையினர் எடுத்துச் சென்றனர்.

கிட்டத்தட்ட 35 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, குடியிருப்பு அருகே உள்ள குட்டையில் இருந்த முதலை மீட்கப்பட்டு, பவானிசாகர் அணையில் விடுவிக்க எடுத்துச் செல்லப்பட்டது. வனத்துறையினரின் இந்த முயற்சிக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...