கோவை தெற்கு தொகுதியில் காடுகளை உருவாக்குவதே எனது எண்ணம் - வானதி சீனிவாசன் எம்எல்ஏ

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி இரத்ததான முகாம் மற்றும் விஸ்வகர்மா ஜெயந்தி விழாவில் பங்கேற்றார். தொகுதியில் காடுகளை உருவாக்கும் திட்டம் குறித்தும் விளக்கினார்.


Coimbatore: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு ராம் நகர் பகுதியில் நடைபெற்ற இரத்ததான முகாமை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், "பிரதமரின் பிறந்த நாளை முன்னிட்டு வருகின்ற அக்டோபர் இரண்டாம் தேதி வரை பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். பிரதமர் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் இந்த நாட்டை வல்லரசு நாடாக மாற்ற வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறோம்," என்றார்.



"அம்மாவின் பெயரில் மரக்கன்று நடும் திட்டம், குறுங்காடுகள் வளர்க்கும் திட்டம், உறுப்பினர் சேர்ப்பு முகாம் ஆகியவற்றை தொடர்ந்து செய்து வருகிறோம். சித்தாப்புதூர் பகுதியில் எச் ராஜாவுடன் இணைந்து உறுப்பினர் சேர்க்கை மற்றும் மரக்கன்று நடும் திட்டத்தை செயல்படுத்தினோம்," என்று அவர் தெரிவித்தார்.

ராம் நகர் பகுதியில் நடைபெற்ற இரத்ததான முகாமில் முப்பது பேர் வரை இரத்த தானம் செய்துள்ளதாக குறிப்பிட்ட அவர், "இரத்த தானம் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஊக்குவிப்பு பொதுமக்களுக்கு தேவைப்படுகிறது," என்றார்.



தொகுதியில் காடுகளை உருவாக்கும் திட்டம் குறித்து பேசிய வானதி சீனிவாசன், "ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள பசுமை படை மாணவர் அமைப்பை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளேன். எனது தொகுதியில் பெரும்பாலும் நாட்டு மரங்களையே குறுங்காடுகள் திட்டத்தில் நடுகிறோம். சிறுதுளி அமைப்பின் உதவியுடன் இத்திட்டத்தை செயல்படுத்துகிறோம். தெற்கு சட்டமன்ற தொகுதியின் பொது இடங்களில் எல்லாம் காடுகளை உருவாக்குவதே எனது எண்ணம்," என்று தெரிவித்தார்.

மேலும், கோவை சுக்கிரவார் பேட்டையில் உள்ள விஸ்வேஸ்வரா பள்ளியில் நடைபெற்ற விஸ்வகர்மா ஜெயந்தி விழாவிலும் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்து, அங்கிருந்த விஸ்வகர்மா சமூக மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

Newsletter

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...