மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்: கோவையில் உடலுக்கு அரசு மரியாதை

உடுமலையில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த 27 வயது இளைஞரின் ஆறு உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. கோவை அரசு மருத்துவமனையில் அவரது உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது.



கோவை: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா கடத்தூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா (27) என்ற இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு கோவை அரசு மருத்துவமனையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

கார்த்திக் ராஜா ஒரு பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். கடந்த செப்டம்பர் 15 அன்று, உடுமலை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்துக்குள்ளானார். உடனடியாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார்.

அவரது உடலில் இருந்து சிறுநீரகம், இதயம், கண் உள்ளிட்ட ஆறு உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இன்று (செப்டம்பர் 17) கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் அவரது உடலுக்கு தலைமை மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் அரசு மரியாதை செலுத்தினர். பின்னர் அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Newsletter

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...

Coimbatore Police Museum to Offer Free Entry on September 6 for Police Day

The Tamil Nadu Police Museum in Coimbatore will offer free entry to the public and school and college students on Septem...

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...