கொடநாட்டில் நடந்த கொலை பின்னணி குறித்து தமிழக காவல் துறை ஆழமாக விசாரிக்க வேண்டும்- வானதி சீனிவாசன்

கொடநாட்டில் நடந்த கொலை சம்பவத்தின் பின்னணி குறித்து தமிழக காவல் துறை ஆழமாக விசாரிக்க வேண்டும் எனவும், ஜெயலலிதா மரணத்தில் கூட சந்தேகம் இருப்பதாக அந்த கட்சியினரே தெரிவிக்கும் நிலையில் இந்த விவகாரத்தை தமிழக அரசு விரிவான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வரும் மே 10, 11, 12 ஆகிய மூன்று நாட்கள் தமிழகம் வருகின்றார். 10-ம் தேதி மற்றும் 11-ம் தேதி ஆகிய இரு தினங்கள் சென்னை நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார். 11-ம் தேதி மாலை கோவை வருகின்றார். பின்னர் 12-ம் தேதி கோவையில் பல்வேறு முக்கிய நபர்களையும், அமைப்புகளையும் சந்தித்து அமித்ஷா பேசவுள்ளார்.

அமித்ஷாவின் கோவை வருகை கொங்கு மண்டலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அமித்ஷா வருகையின் போது சென்னையில் பிரத்யேக செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக மீது பாஜக எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. அதிமுக-வின் நிர்வாகிகள் எந்த புகாரும் தெரிவிக்காத போது எதிர்க்கட்சிகள் மட்டுமே பாஜக மீது புகார் தெரிவித்து விருகின்றனர். பாஜக மீது நாஞ்சில் சம்பத் சொல்லக்கூடிய குற்றச்சாட்டுகள் உண்மையில்லாதது.

அதிகார மையத்தின் தலைமையிடமாக இருந்த கொடநாட்டில் நடந்த கொலை சம்பவத்தின் பின்னணி குறித்து தமிழக காவல் துறை ஆழமாக விசாரிக்க வேண்டும். ஜெயலலிதா மரணத்தில் கூட சந்தேகம் இருப்பதாக அந்தக் கட்சியினரே தெரிவிக்கும் நிலையில் இந்த விவகாரத்தை தமிழக அரசு விரிவான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். 

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் கருத்துகள், நிலைப்பாடுகள் மாற்றம் ஏற்பட்டு இருந்தால் அது குறித்து விரிவாக்கம் அளிக்க வேண்டியது அவர்தான். அமித்ஷா வரும் போது டாக்டர். கிருஷ்ணசாமி பாஜக-வுடன்  இணைவாரா என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது.

தமிழக அரசியல் சூழல் பாஜக-விற்கு சாதகமாகவே இருந்து வருகின்றது. சமூக நீதி பேசும் தலைவர்கள் மத்திய அரசு கொண்டு வரும் பிற்படுத்தப்பட்டோருக்கான புதிய ஆணையம் தொடர்பான சட்டமசோதாவிற்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும். இந்தியை புகுந்த மத்திய அரசு முயற்சிக்கவில்லை" இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...