கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளியில் STEM மற்றும் ICT ஆய்வகம் திறப்பு

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் STEM மற்றும் ICT ஆய்வகம் திறப்பு. மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். 15 மாநகராட்சி பள்ளிகளின் மாணவர்கள் பயனடைவர்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட சித்தாபுதூர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள STEM மற்றும் ICT ஆய்வகத்தினை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் அவர்கள் முன்னிலையில், மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள் இன்று (16.09.2024) துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்.



இந்த ஆய்வகத்தில் STEM (Science Technology Engineering Mathematics - அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) மற்றும் ICT பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு கோயம்புத்தூர் மாநகராட்சியின் 15 பள்ளிகளைச் சேர்ந்த 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு, ஆகஸ்ட் 2024 முதல் ஜூலை 2025 வரை வாரத்திற்கு 1 முதல் 3 பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது.



இந்த ஆய்வகத்தின் முதன்மை நோக்கம் இளம் விஞ்ஞானிகளை உருவாக்குவதாகும். ICT பேனல் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கத்துடன் அறிவியல், கணிதம் மற்றும் ரோபாட்டிக்ஸ் ஆகியவற்றில் பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கிய 80க்கும் மேற்பட்ட மாதிரிகள் இந்த ஆய்வகத்தில் உள்ளன. இந்த மாதிரிகள் கருத்தியல் தெளிவைக் கொண்டு வருவதற்கும், குழந்தைகளுக்கான கற்றல் அனுபவத்தை வளர்ப்பதற்கும் துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வின்போது, துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், கல்விக்குழு தலைவர் மாலதி நாகராஜ், மாமன்ற உறுப்பினர் வித்யா ராமநாதன், மாநகர கல்வி அலுவலர் குணசேகரன், உதவி ஆணையர் செந்தில்குமரன், செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், STEM மற்றும் ICT நிறுவன அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

Coimbatore Police Museum to Offer Free Entry on September 6 for Police Day

The Tamil Nadu Police Museum in Coimbatore will offer free entry to the public and school and college students on Septem...

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...