வால்பாறையில் விநாயகர் சதுர்த்தி விழா: 108 சிலைகள் ஊர்வலம் மற்றும் கரைப்பு

கோவை மாவட்டம் வால்பாறையில் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாட 108 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நடுமலை ஆற்றில் கரைக்கப்பட்டன. இந்து முன்னணியின் 33வது ஆண்டு கொண்டாட்டமாக இந்நிகழ்வு நடைபெற்றது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடும் வகையில், 108 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நடுமலை ஆற்றில் கரைக்கப்பட்டன. இந்து முன்னணியின் சார்பில் 33வது ஆண்டாக இந்த விழா கொண்டாடப்பட்டது.

வால்பாறை மற்றும் எஸ்டேட் பகுதிகளில் 108 விநாயகர் சிலைகள் வால்பாறை சுப்பிரமணி திருக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.



பின்னர், இந்த சிலைகள் வாகனங்களில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.



ஊர்வலம் வால்பாறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முன்பு துவங்கி, காந்தி சிலை வழியாக வாழைத்தோட்டம், புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகள் வழியாகச் சென்றது.



பின்னர் மீண்டும் சுப்பிரமணியம் கோவில் வளாகத்தின் வழியாக நடுமலை ஆற்றை அடைந்தது. அங்கு சிலைகள் கரைக்கப்பட்டன.



இந்நிகழ்வில் இந்து முன்னணி தெற்கு மாவட்ட துணைத் தலைவர் சேகர் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக ராஜேஷ் (மாநில அமைப்பாளர்), C M அண்ணா துறை மாநில செயலாளர், T. பாலச்சந்திரன் (கோவை கோட்ட செயலாளர்) மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...