இந்தியாவில் முதன்முறையாக ராயல் கேர் மருத்துவமனையில் "பிரான்கியல் தெர்மோபிளாஸ்ட்டி" ஆஸ்துமா சிகிச்சை

தமிழகத்தில் பஞ்சாலை தொழில் நகரமாக விளங்கும் கோவை மாநகரத்தில் ஆஸ்துமா நோயினால் ஏராளமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதுவரை இந்த மூச்சுக்குழாய் பாதிப்புக்கு இன்ஹேலர் மூலம் உறிஞ்சப்படும் மருந்துகளை கொண்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில சமயங்களில் நோயின் தீவிரத் தன்மையைப் பொறுத்து நெபுலைசர், ஸ்டெராய்டு மருந்துகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிப்பது போன்றவைகள் மேற்கொள்ளப்பட்டன. 

நுரையீரலின் தசைகள் 50 சதவிகிதத்திற்கு மேல் சுருங்கும் பொழுது மூச்சு இளைப்பு நோயாக மாறுகிறது. தற்பொழுது அதிநவீன நுரையீரல் சிகிச்சை முறையான "பிரான்கியல் தெர்மோபிளாஸ்ட்டி" என்ற சிகிச்சை முறையானது இந்தியாவிலேயே முதல் முறையாக கோவையில் அமைந்துள்ள ராயல் கேர் உயர்சிகிச்சை மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நவீன சிகிச்சை முறையில் குறைந்த அளவே மயக்க மருந்து செலுத்தப்படும். ஒரு சிறிய குழாய் மூச்சு குழாயில் செலுத்தப்பட்டு அதன் மூலமாக கதீட்டர் செலுத்தப்பட்டு வெப்ப நீக்கம் என்ற சிகிச்சை முறை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த வெப்ப நீக்கத்தின் மூலம் வீக்கம் அடைந்துள்ள நுரையீரலின் தசைப்பகுதிகள் சரிசெய்யப்படுகிறது. இந்த நுரையீரல் இடையீட்டு சிகிச்சை மூலம் ஆஸ்துமா நோய் பாதிப்பு, அவசர சிகிச்சை மற்றும் மருந்துகளின் தேவைகளை வெகுவாக குறைக்கப்படுகிறது. 

இந்த நவீன சிகிச்சை முறையை ராயல் கேர் உயர்சிறப்பு மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சை துறையின் மருத்துவ நிபுணர்களான மருத்துவர்கள் பட்டாபிராமன், மஹாதேவன் மற்றும் அர்ஜூன் ஸ்ரீனிவாசன் ஆகியோரால் திறம்பட மேற்கொள்ளப்படுகிறது.



இதுகுறித்து ராயல் கேர் மருத்துவமனையின் சேர்மன் மருத்துவர் கே.மாதேஸ்வரன் கூறுகையில், இந்த அதிநவின இடையீட்டு நுரையீரல் சிகிச்சை முறையானது எங்களது மருத்துவமனையில் கையாளப்படும் உலகத்தரம் வாய்ந்த நவீன சிகிச்சை முறைகளுடன் இணைந்து மேலும் சிறப்புடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சை முறையானது ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஒரு மிகச்சிறப்பான எளிமையான வைத்திய முறையில் நிவாரணம் பெற வழிவகை செய்கிறது" என தெரிவித்தார்.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...