கோவை போத்தனூரில் பணம் கேட்டு மிரட்டிய ஆட்டோ டிரைவர் உள்பட இருவர் கைது

கோவை போத்தனூரில் பெட்டிக்கடை நடத்தும் வியாபாரியிடம் பணம் கேட்டு மிரட்டிய ஆட்டோ டிரைவர் மற்றும் தொழிலாளி ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். சம்பவம் நேற்று (செப்.12) நடந்தது.


கோவை: கோவை போத்தனூர் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் வியாபாரியிடம் பணம் கேட்டு மிரட்டிய ஆட்டோ டிரைவர் உள்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முரளி (வயது 25) என்பவர் போத்தனூர் சாரதா மில் ரோட்டில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று (செப்.12) கடை அருகே நின்றிருந்த முரளியிடம் அங்கு வந்த இரண்டு பேர் மது குடிக்க பணம் கேட்டனர். முரளி பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர்கள் கத்தி முனையில் அவரை மிரட்டினர்.

அதிர்ச்சியடைந்த முரளி உரத்த குரலில் சத்தமிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததும், அந்த இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இது குறித்து முரளி போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், பணம் கேட்டு மிரட்டியவர்கள் போத்தனூர் நூராபாத்தை சேர்ந்த தொழிலாளி நிஷாம் (வயது 33) மற்றும் போத்தனூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அகமத் சமீர் (வயது 32) என தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...