கோவையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

கோவையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்த 65 வயது முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


Coimbatore: கோவையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 65 வயது முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த மோகன் (எ) மோகன்ராஜ் (65) என்ற கூலித் தொழிலாளி, தனது பேரனுடன் விளையாடி வந்த 12 வயது சிறுமிக்கு 2022 ஆகஸ்ட் மாதத்தில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் அவர் மிரட்டியுள்ளார்.

இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் மோகன்ராஜை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.

கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், நீதிபதி குலசேகரன் செப்டம்பர் 12 அன்று தீர்ப்பு வழங்கினார். அதன்படி, மோகன்ராஜுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக ஓராண்டு சிறையுடன் ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

நீதிபதி குலசேகரன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். இந்த தீர்ப்பு பாலியல் குற்றவாளிகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...