மடத்துக்குளத்தில் தமிழ் புலிகள் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் - மாநில தலைவர் நாகை திருவள்ளுவன் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் தமிழ் புலிகள் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் நாகை திருவள்ளுவன் பங்கேற்று கட்சி வளர்ச்சி குறித்து உரையாற்றினார். முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் திருப்பூர் தெற்கு மற்றும் கிழக்கு மாவட்ட தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்டச் செயலாளர்கள் திருப்பதி மற்றும் காளிமுத்து ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழ் புலிகள் கட்சியின் மாநில தலைவர் நாகை திருவள்ளுவன் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி குறித்து உரையாற்றினார். பின்னர், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அருந்ததியர் உள் ஒதுக்கீடு தீர்ப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அளித்துள்ள மறுசீராய்வு மனுவை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

உடுமலை கோட்டாட்சியர் கண்டிசன் நிலங்களுக்கு NOC வழங்குவதை தமிழ் புலிகள் கட்சி வன்மையாக கண்டித்தது. மேலும், உடுமலைப்பேட்டை சார்பதிவாளர் போலி பத்திரங்களை தயாரித்து வழங்குவதற்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

எதிர்வரும் செப்டம்பர் 28, 2024 அன்று கோவையில் 3 சதவீத உள் ஒதுக்கீட்டை பெற்றுத் தந்த திராவிட மாடல் அரசுக்கு பாராட்டு விழா நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், Dharapuram ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...