கோவையில் சிறப்பாக நடைபெற்ற ஆசிரியர் தின விழா: 11 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது

கோயம்புத்தூர் மாநகராட்சியின் ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில், மாநில அளவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற 11 ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி.ப.ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் ஆசிரியர் தின விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வு கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி.ப.ராஜ்குமார் தலைமையில், மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர், தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி கல்வித்துறையில் பல்வேறு திட்டங்கள் சிறப்புடன் செயல்படுத்தப்படுவதாகவும், மாநகராட்சி பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக அமைந்ததாகவும் பாராட்டினார்.

மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் பேசுகையில், மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் வருகை மற்றும் தேர்ச்சி சதவீதம் உயர்ந்து வருவது பெருமைக்குரியது என்றார். மேலும், ஆசிரியர்களை கௌரவிக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவதாக உறுதியளித்தார்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, மாநில அளவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 11 ஆசிரியர்கள் சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில், மாநகராட்சி பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை நாடாளுமன்ற உறுப்பினரும் மாநகராட்சி ஆணையாளரும் பார்வையிட்டனர்.

இந்நிகழ்வில் மாநகராட்சி துணை ஆணையாளர் K. சிவகுமார், மண்டலத் தலைவர்கள் K.A. தெய்வயானை தமிழ்மறை, இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மீனாலோகு, மாவட்ட கல்வி அலுவலர் கோமதி, மண்டல உதவி ஆணையர்கள் சந்தியா, செந்தில்குமரன், ஸ்ரீதேவி, மாநகர கல்வி அலுவலர் R. குணசேகரன், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...