கோவை வ.உ.சி. மைதானத்தில் பிரம்மாண்ட கடல் கன்னி கண்காட்சி துவக்கம்

கோவை வ.உ.சி. மைதானத்தில் எம்.கே.சி. எண்டர்டெயின்மெண்ட் சார்பாக பிரம்மாண்டமான மரைன் எக்ஸ்போ துவங்கியது. ஒன்றரை இலட்சம் சதுர அடியில் அமைக்கப்பட்ட இந்த கண்காட்சி, மீன் சுரங்கம், கடல் கன்னி மற்றும் வெளிநாட்டு விளையாட்டு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.



கோவை: கோவை வ.உ.சி. மைதானத்தில் பிரம்மாண்டமான மரைன் எக்ஸ்போ எனும் கடல் கன்னி கண்காட்சி துவங்கியது.



எம்.கே.சி. எண்டர்டெயின்மெண்ட் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சி குறித்து, நிறுவனத்தின் உரிமையாளர் சிட்டி பாபு மற்றும் சந்திரசேகர் செய்தியாளர்களிடம் விவரங்களை பகிர்ந்து கொண்டனர்.



கோவை மக்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த கண்காட்சி சுமார் ஒன்றரை இலட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அரசு வழிகாட்டுதல்களின்படி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். மேலும், ஏராளமான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.



கோவையில் இது போன்ற பிரம்மாண்ட கண்காட்சி முதல் முறையாக நடைபெறுவதாக அவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.



வெளிநாடுகளில் காணப்படுவது போன்ற இலட்சக்கணக்கான மீன்களைக் கொண்ட சுரங்கங்கள், கடல் கன்னி உள்ளிட்டவை பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.



இந்த கண்காட்சியில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

வெளிநாட்டு பிரம்மாண்ட ராட்டினம், உணவு அரங்குகள், ஸ்னோ வேர்ல்ட், பேய் வீடு, 3D கண்காட்சி அரங்குகள் ஆகியவை இதில் அடங்கும். மேலும், உணவுப் பொருட்கள், ஆடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனைக்கான அரங்குகள் என 50க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த பிரம்மாண்ட கடல் கன்னி கண்காட்சி கோவை மக்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீன் சுரங்கம், கடல் கன்னி மற்றும் வெளிநாட்டு விளையாட்டு அம்சங்கள் என பல்வேறு வகையான அரங்குகளை கோவை வாழ் மக்கள் காணும் அரிய வாய்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...