உடுமலையில் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு குறித்து அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்

உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகளின் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு குறித்து அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. புதிய வாக்குச்சாவடிகள் அமைத்தல், இடமாற்றம் செய்தல் போன்ற முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.



Coimbatore: உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு குறித்து அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு மற்றும் பகுப்பாய்வு குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ நேர்முக உதவியாளர் ஜலஜா தலைமை வகித்தார். உடுமலை சட்டமன்றத் தொகுதியில் கள்ளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியை மாற்றுவதற்கும், சூளேஸ்வரன்பட்டியில் உள்ள வாக்குச்சாவடிகளை பிரிப்பதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.



மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் ருத்ராபாளையம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியை இரண்டாகப் பிரிப்பதற்கும், குப்பம்பாளையம் பகுதியில் புதிய வாக்குச்சாவடி அமைப்பதற்கும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உடுமலை சட்டமன்ற தொகுதியில் 294 வாக்குச்சாவடிகளில் 2,64,414 வாக்காளர்களும், மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் 287 வாக்குச்சாவடிகளில் 2,36,059 வாக்காளர்களும் உள்ளனர்.

இந்த நிகழ்வில் மடத்துக்குளம் தாசில்தார் பானுமதி, தேர்தல் துணை தாசில்தார்கள் சையது ராபியம்மாள், வளர்மதி, உடுமலை நகர பாஜக தலைவர் கண்ணாயிரம், திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன், உடுமலை நகர காங்கிரஸ் தலைவர் கோ. ரவி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதி கிருஷ்ணசாமி, பகுஜன் சமாஜ் கட்சி பிரதிநிதி கிருபாகரன், திமுக மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...